சகோதரியை கர்ப்பமாக்கிய சசோதரணுக்கு 10 ஆண்டு சிறை - Yarl Voice சகோதரியை கர்ப்பமாக்கிய சசோதரணுக்கு 10 ஆண்டு சிறை - Yarl Voice

சகோதரியை கர்ப்பமாக்கிய சசோதரணுக்கு 10 ஆண்டு சிறை

யாழ்ப்பாணத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒன்றுவிட்ட முறையான சகோதரி ஒருவரை இரண்டு முறை பாலியல் வன்புணர்வு செய்து அவரை கர்ப்பமாக்கிய சகோதரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த வழக்கில் எதிரியாக பாதிக்ப்பட்ட பெண்ணின் ஒன்றுவிட்ட சகோதரனது பெயர் குறிப்பிடப்பட்டு சட்டமா அதிபரால் அந் நபருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணைகளை விசாரணைகளை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தியிருந்தார்.
இதன்படி அவ் வழக்கு விசாரனைகளின் ஊடாக குறித்த ஒன்றுவிட்ட சகோதரனே அப் பதினாறு வயதிற்கு குறைந்த தனது சிறியதாயின் மகளை இரண்டு முறை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தி அவரை கர்ப்பமடைய செய்தமை உறுதிப்படுத்தப்பட்டிருந்த்து.

இந்நிலையில் குறித்த வழக்க இன்று தீர்ப்புக்காக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது இதன்படி குறித்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும், கட்டத் தவறின் 2 மாத கடூழிய சிறைத் தண்டனையும் அத்துடன் 2 இலட்சம் ரூபா நஸ்ர ஈடும் அதனை கட்டதவறின் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post