2 கோடி பெற்றார் சிறீதரன் ஆர்.ரி.ஐ. உறுதி செய்தது! - Yarl Voice 2 கோடி பெற்றார் சிறீதரன் ஆர்.ரி.ஐ. உறுதி செய்தது! - Yarl Voice

2 கோடி பெற்றார் சிறீதரன் ஆர்.ரி.ஐ. உறுதி செய்தது!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இரண்டு கோடி ரூபா அபிவிருத்தி நிதி பெற்றுக்கொண்டமை ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசிடம் இருந்து தான் இரண்டு கோடி ரூபா விசேட நிதி எதனையும் தான் பெற்றுக்கொள்ளவில்லை என சிறீதரன் தொடர்ந்து மறுத்துவந்தார்.

நூன் இரண்டு கோடி பெற்றதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா எனவும் சிறீதரன் பகிரங்க சவால் விட்டிருந்தார்.

இந்த நிதி ஒதுக்கீடு தமக்குக் கிடைத்தையும்இ அதன் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களையும் பெரும்பாலான கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்pப்படுத்தியிருந்தனர். ஆனால் நிதியே பெறவில்லை என்றே சிறீதரன் தொடர்ந்து கூறிவந்தார்.

இந்நிலையில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசியத் திட்டமும் கொள்கையும் என்ற அபிவிருத்தித் திட்டம் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக தினக்குரல் செய்தியாளர் கோரியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் கிடைத்த தகவலில் பாரளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்த ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு கோடி ரூபா நிதி பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டு;ளது.

இந்த நிதியை அவர் எந்தெந்த வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார் என்ற தகவலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தி;ன் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post