350 வாக்குச்சீட்டுக்கள் திருட்டு: தபால் ஊழியர் கைது! - Yarl Voice 350 வாக்குச்சீட்டுக்கள் திருட்டு: தபால் ஊழியர் கைது! - Yarl Voice

350 வாக்குச்சீட்டுக்கள் திருட்டு: தபால் ஊழியர் கைது!

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட 350 வாக்காளர் அட்டைகள் காணாமல் போனமை தொடர்பில் தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி, பல்லேபெத்த தபால் அலுவலம் மூலம் பகிர்ந்தளிப்பதற்காக வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் மறைத்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபரை கொடகவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான குறித்த தபால் ஊழியர் கடந்த 01 ஆம் திகதி எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிபதி திருமதி ஹிரேரி காஹின்கல சந்தேகநபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பணிப்புரை வழங்கினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post