5 சபைகளின் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய பேரவை தீர்மானம் - Yarl Voice 5 சபைகளின் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய பேரவை தீர்மானம் - Yarl Voice

5 சபைகளின் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய பேரவை தீர்மானம்

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் சைக்கில் சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வெற்றியை பெற்ற தமிழ் தேசிய பேரவை யாழ்.மாவட்டத்தில் உள்ள 5 சபைகளில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக சபைகளின் நிர்வாக தெரிவுகளின் போது இரகசிய வாக்கெடுப்பு ஒன்றினை கோரி அதன் ஊடாக ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்றகொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக யாழ்.மாநகர சபை, சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை, கரவெட்டி பிரதேச சபை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளிலே ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையினை அக் கட்சி மேற்கொண்டு வருகின்றது.
இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் அவர்கள் பேசி வருகின்றார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post