தமிழர்களின் அழிவுக்கு மஹிந்தவே காரணம் -சம்பந்தர்- - Yarl Voice தமிழர்களின் அழிவுக்கு மஹிந்தவே காரணம் -சம்பந்தர்- - Yarl Voice

தமிழர்களின் அழிவுக்கு மஹிந்தவே காரணம் -சம்பந்தர்-

முன்னால் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச யாழ்ப்பாணத்திகு சென்று மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டு வருகிறார்.தாம் அரசியல் தீர்வு ஒன்றை சமாதானமாக ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழைத்த போது அவர்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை இதனால்தான் யுத்தம் தீவிரமடைந்தது என்று தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரம சிங்கவின் சட்டைப் பை என கூறிவருகிறார் இவை எல்லாம் தேர்தல் காலங்களில் தமிழ் மக்களை ஏமாற்ற மகிந்தவின் சூழ்ச்சிகள் என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நகரசபை தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றும் பேதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபையின் முன்னால் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் கலந்து கொணடனர்.

தொடர்ந்து உரையாற்றும் போது ரணில் விக்கிரமசிங்கவை எனக்கு மிக நீண்ட காலமாக தெரியும் அவருடைய மாமனார் முன்னால் ஜனாதிபதி ஜெயார் ஜெயவர்தன அவர் 1977 ம் ஆண்டு முதல் என்னை தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்ள கடும் முயற்சி செய்தார்.அவரால் இதில் வெற்றி கொள்ளவில்லை அது ரணில் விக்ரம சிங்கவிற்கு நன்கு தெரியும்.எனவே அவர்என்னை தனது சட்டைப் பைக்கள் போட்டுக் கொள்ள முயற்சிக்கவில்லை.

எனவே மகிந்த ராஜபக்ச கடந்த கால சமாதான முயற்சிகள் தொடர்பில் பொய்யான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்.தாம்முயற்சி செய்ததாகவும் நாம் அலட்சியப்ட்படுத்தியதாகவும் தெரிவித்து வருகின்றார். ஆவர் கூறும் இக்கருத்தை நாம் அலட்சியமாக விட்டு விட முடியாது.மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post