சிரியாவில் குண்டுமழை பொழிந்த ரஸ்ய போர் விமானங்கள் - Yarl Voice சிரியாவில் குண்டுமழை பொழிந்த ரஸ்ய போர் விமானங்கள் - Yarl Voice

சிரியாவில் குண்டுமழை பொழிந்த ரஸ்ய போர் விமானங்கள்

சிரியாவில் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக வான்வழித்தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்கள் மீது வான்வழித் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹீட்லக்இ மாரத் ஆகிய நகரங்களின் மீது ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. ரஷ்ய விமான தாக்குதலில் தீவிரவாதிகள் 30 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து தாக்குவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள்இ மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. ஆனால் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக கிளர்ச்சியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post