அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போய்விட்டதாக கூறப்படுவது பாரதூரமான குற்றச்சாட்டு. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்கள் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் சோரம் போய்விட்டதாக கூறப்படுவது பிழையான விடயம். ஆனால், தன்னால் இயன்றதை கூட்டமைப்பு சரியாக செய்கின்றதா என்பது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் சோரம் போனது என்பதை ஏற்க முடியாது.
அரசாங்கத்தின் ஆக்கத்திற்கு நாம் எவ்வாறு உள்ளிருந்து பங்களிப்பு செய்கின்றோமோ, அதேபோன்று கூட்டமைப்பு வெளியிலிருந்து பங்களிப்பு செய்துவருகிறது’ என்று கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் சோரம் போய்விட்டதாக கூறப்படுவது பிழையான விடயம். ஆனால், தன்னால் இயன்றதை கூட்டமைப்பு சரியாக செய்கின்றதா என்பது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் சோரம் போனது என்பதை ஏற்க முடியாது.
அரசாங்கத்தின் ஆக்கத்திற்கு நாம் எவ்வாறு உள்ளிருந்து பங்களிப்பு செய்கின்றோமோ, அதேபோன்று கூட்டமைப்பு வெளியிலிருந்து பங்களிப்பு செய்துவருகிறது’ என்று கூறினார்.
Post a Comment