மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கலாம் -மகிந்த தேசப்பிரிய- - Yarl Voice மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கலாம் -மகிந்த தேசப்பிரிய- - Yarl Voice

மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கலாம் -மகிந்த தேசப்பிரிய-

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அடுத்த மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குருணாகலவில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடத்த முடியும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கும்.

நடந்து முடிந்த தேர்தலில், ஏதேனும் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்கள், பணம், பொருட்கள் அல்லது வேறேதும் பெறுமதியான பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post