த.தே.கூ எம்.பிக்கள் வாக்களிப்பில் - Yarl Voice த.தே.கூ எம்.பிக்கள் வாக்களிப்பில் - Yarl Voice

த.தே.கூ எம்.பிக்கள் வாக்களிப்பில்

2018 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றங்களின் வாக்களிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டுவரும் அதே நேரத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடமராட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குடத்தணை பாடசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு இன்று காலை சென்று தனது வாக்கிகை பதிவு செய்துள்ளார்.

அதே போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா வலி.வடக்கில் உள்ள கொல்லங்கலட்டி சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post