யாழ்ப்பாணத்தில் இருந்த பயணிகளை ஏற்றிச் சென்ற கியூலைன் பேருந்து அனுராதபுரம் ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அவ் வீதியில் சென்று கொண்டிருந்த மற்றுமொரு பயணிகள் பேருந்துடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த பேருந்து நேராக மோதிக் கொண்டதினாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்துச் சம்பவத்தில் பயணிகளுக்கு பெரியளவில் சேதம் ஏற்படவில்லை. ஒரு சில பயணிகளுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்தினை ஏற்படுத்திய கியூலைன் பேருந்தின் பயணிகள் மற்றுமொரு பேருந்தில் ஏற்றி பாதுகாப்பாக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தின் முன்பக்கம் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அவ் வீதியில் சென்று கொண்டிருந்த மற்றுமொரு பயணிகள் பேருந்துடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த பேருந்து நேராக மோதிக் கொண்டதினாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்துச் சம்பவத்தில் பயணிகளுக்கு பெரியளவில் சேதம் ஏற்படவில்லை. ஒரு சில பயணிகளுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்தினை ஏற்படுத்திய கியூலைன் பேருந்தின் பயணிகள் மற்றுமொரு பேருந்தில் ஏற்றி பாதுகாப்பாக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தின் முன்பக்கம் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment