சிறுவர்களை அரசியலில் நுழைக்காதீர்கள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வேண்டுகோள்! - Yarl Voice சிறுவர்களை அரசியலில் நுழைக்காதீர்கள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வேண்டுகோள்! - Yarl Voice

சிறுவர்களை அரசியலில் நுழைக்காதீர்கள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வேண்டுகோள்!

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த ​வேண்டாமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதுதொடர்பில், சகல அரசியல் மற்றும் சுயேட்சை கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றமை ​தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தேசிய சிறுவர் பாதுகாப்பு சபைக்கு முறைபாடு கிடைத்துள்ளதாக சபை அறிவித்துள்ளது.

சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் ஊடாக அவர்கள் மனரீதியாக அல்லது உடல்ரீதியாக பாதிக்கப்படுகின்றமை சிறுவர் துஷ்பிரயோகமெனவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.

எனவே, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் தருமாரும் அதிகாரசபையால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post