ஊர்காவற்றுறை கொலை சி.ஜ.டிக்கு அறிக்கை - Yarl Voice ஊர்காவற்றுறை கொலை சி.ஜ.டிக்கு அறிக்கை - Yarl Voice

ஊர்காவற்றுறை கொலை சி.ஜ.டிக்கு அறிக்கை

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மர்ம்மான முறையில் கொலை செய்யப்பட்டிருந்த கர்ப்பிணி தாய ஹம்சிகா கொலை தொடர்பான விசாரனையை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றியது தொடர்பான அறிக்கையானது இன்னும் அவர்களுக்கு சென்றடையவில்லை என ஊர்காவற்றுறை நீதிமன்று தெரிவித்துள்ளது.

குறித்த வழக்கானது நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி விடயமானது மன்றால் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேற்றைய வழக்கு விசாரனையின் போது சந்தேகநபர் சார்பாக சட்டத்தரணி திருக்குமார் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பில் சட்டத்தரணி சுகாஸ் சார்பாக சட்டத்தரனி சாலினி முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போதே நீதிவான் மேற்படி விடயத்தை குறிப்பிட்டு இவ் வழக்கின் விசாரனையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்தி வைத்ததுடன் அதுவரை சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

இதேவேளை கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு குறித்த கர்ப்பிணி பெண் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டிருந்த போதும் அது தொடர்பான விசாரனையானது ஒரு வருடங்களின் பின்னரே குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post