சஜித்தை கிண்டலடிக்கும் மகிந்த - Yarl Voice சஜித்தை கிண்டலடிக்கும் மகிந்த - Yarl Voice

சஜித்தை கிண்டலடிக்கும் மகிந்த


ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாச குறித்து பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுனவிற்கு சவாலானவர் இல்லை எனவும் கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் நியமனத்தால் தமக்கு எந்த சவாலும் இல்லை எனவும் இது தாங்கள் எதிர்பார்த்தது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் சஜித் பிரேமதாச போட்டியிட வேண்டும் என்பதே எப்போதும் தனது கருத்து எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையேஇ சஜித் பிரேமதாச தனது திஸ்ஸமகாராமஇ அம்பாந்தோட்டை தொகுதிகளிலேயே வெல்ல முடியாத நிலையில் முழு நாட்டிலும் வெல்ல முடியுமா எனவும்  இதன்போது மகிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளைஇ ஐக்கிய தேசியக் கட்சி தனது 'யானை' சின்னத்தையே சஜித் பிரேமதாசவிற்கு வழங்கவில்லை. சரத் பொன்சேகாவிற்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் வழங்கிய அன்னத்தையே வழங்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

அவர்கள் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என்ற நிலையில் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருக்கின்றார். எனவே அவருக்கு 'யானை' சின்னத்தை வழங்கியிருக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post