கொட்டும் மழையிலும் உணர்வெழுச்சியாக கோப்பாயில் மாவீரர் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியாக மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
பொதுச் சுடரை மாவீரர்களின் சகோதரி ஒருவர் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் உறவினர்கள் ஏற்றியதைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் போது கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி உறவுகள் கதறியழுதனர். பெருமளவலானோர் கலந்து கொண்டு மாவீர்களுக்கு அஞ்சலி செயலுத்தியிருந்தனர்.
Post a Comment