சிறப்பாக இடம்பெற்ற யாழ் இராமநாதன் கல்லூரி அதிபரின் மணி விழா - Yarl Voice சிறப்பாக இடம்பெற்ற யாழ் இராமநாதன் கல்லூரி அதிபரின் மணி விழா - Yarl Voice

சிறப்பாக இடம்பெற்ற யாழ் இராமநாதன் கல்லூரி அதிபரின் மணி விழா


யாழ் இராமநாதன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி கமலராணி கிருஸ்ணபிள்ளையின் மணி விழா நிகழ்வு இன்று காலை கல்லூரியில் நடைபெற்றது.

இக் கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி உமாவதி ரவிகரன் தலைமையில் கல்லூரியின் அருணாசலம் மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது ஆலய வழிபாடுகளை மேற்கொண்டு; கமலராணி கிருஸ்ணபிள்ளை மற்றும் விருந்தினர்கள் கல்லூரி மாணவிகளின் பாண்ட் வாத்தியங்களுடன் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாடசாலைக் கொடி ஏற்ப்பட்டு விருந்தினர்கள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன் போது வரவேற்பு நடனமும் இடம்பெற்றிருந்தது.

மேலும் கமலம் எனும் மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சொஞ்செற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் வாழ்த்துரையை வழங்கியிருந்தார்.

 மேலும் நிகழ்வில் யாழ் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post