இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.
புதிய அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை கடந்த வாரம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.
அந்த நிலையில் இராஜாங்க அமைச்சர்களின் நியமனங்கள் நேற்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த போதிலும் சில காரணங்களுக்காக புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள பதவிப்பிரமாண நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரஇ அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment