தடைகளைத் தாண்டி மாவீரர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் நல்லூரில் - Yarl Voice தடைகளைத் தாண்டி மாவீரர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் நல்லூரில் - Yarl Voice

தடைகளைத் தாண்டி மாவீரர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் நல்லூரில்


யாழ்ப்பாணம் நல்லூரில் 25000 மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் திலீபனின் நினைவு தூபி முன்பாக தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் சொந்த பெயர்களை வைத்து அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸார் மாவீரர்களின் பெயர்களை வைக்க முடியாது என்று தடுத்துள்ளனர்.

ஆயினும் தடைகளைத் தாண்டியும் 2500 மாவீரர்களின் கல்வெட்டக்கள் வைக்கப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்பொது பெருமளிலானொர் சென்று பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post