சஜித்திற்கு பதவியை விட்டுக் கொடுக்குமாறு கோரவில்லை - சம்மந்தன் அதிரடி - Yarl Voice சஜித்திற்கு பதவியை விட்டுக் கொடுக்குமாறு கோரவில்லை - சம்மந்தன் அதிரடி - Yarl Voice

சஜித்திற்கு பதவியை விட்டுக் கொடுக்குமாறு கோரவில்லை - சம்மந்தன் அதிரடி


முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தாம் யாருக்கும் எப்போதும் அவ்வாறான அறிக்கை வெளியிடவோஇ கருத்துக்களைக் கூறவோ இல்லை என்றும் இது முற்றிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்விவகாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் பதவியை  சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளாரென அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சம்பந்தன் அதை மறுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 'தேர்தலில் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெளிவான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு அமைச்சரவையும் ஜனாதிபதியும் பதிலளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தேசிய பிரச்சினைக்கான இறுதித் தீர்வை விரைவாகக் கண்டறிவதற்கு புதிய அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்று நம்புகிறோம்.

ஜனாதிபதி தற்போது பல அவசர விடயங்களில் ஈடுபட்டிருக்கிறார். அவர் இந்தியா செல்கிறார். நாங்கள் ஓரிரு நாட்கள் காத்திருந்து பார்ப்போம்.

எல்லாவற்றிற்கும் மேலாகஇ தேர்தல் நடந்து ஒரு வாரம் மட்டுமே ஆகிறது. மக்களின் தீர்ப்பு ஜனாதிபதிக்கும் முழு உலகிற்கும் தெரியும்'என மேலும் அவர் கூறியுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post