இலங்கை தமிழ்ப் பெண்ணிற்கு ஐ.நா வில் கிடைத்த பதவி - Yarl Voice இலங்கை தமிழ்ப் பெண்ணிற்கு ஐ.நா வில் கிடைத்த பதவி - Yarl Voice

இலங்கை தமிழ்ப் பெண்ணிற்கு ஐ.நா வில் கிடைத்த பதவி


ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் (யுஎன்டிபி) ஆசிய -பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்னி விக்னராஜா என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டவராவார்.அவர் நாளை டிசம்பர் 1ஆம் திகதி தனது பதவியை ஏற்கவுள்ளார்.

கன்னி விக்னராஜா ஐ.நா முறைமைகளில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான நீண்டகால அனுபவம் கொண்டவராவார்.

இவர் யு.என்.டி.பி.யின் நாடுஇ பிராந்திய மற்றும் அனைத்துலக அளவில் ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களில் பணியாற்றியுள்ளார்.

முன்னதாக இவரை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ்இ ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான உதவி செயலாளர் நாயகமாகவும்இ உதவி நிர்வாகியாகவும் நியமித்திருந்தார்.

இலங்கையில் பிறந்த கன்னி விக்னராஜா பிறின்ஸ்ரென் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் டீசலn ஆயறச கல்லூரியில் பொருளாதாரத் துறையில் இளமாணி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post