இலங்கை - இந்திய உறவு வலுப் பெற வேண்டும் - இந்தியாவில் ஐனாதிபதி கோட்டபாய
இந்திய மற்றும் இலங்கை மக்களின் நலன்களுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்குஇ இந்திய குடியரசு தலைவர் இல்லத்தில் உத்தியோகபூர்வ இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிஇ இந்திய ஜனாதிபதி ஆகியோர் இதில் கலந்து கொண்டுஇ கோட்டாபய ராஜபக்ஷவினை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றியிருந்தனர்.
இந்தியா – இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு – பொருளாதார பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment