இந்தியா மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது இரா சம்பந்தன்
இனப் பிரச்சினை தீர்வுக்காக ஆற்றவேண்டிய அனைத்து பணிகளையும் இந்தியா ஆற்றும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்திருந்தார்.
இதன்போது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்து மோடியினால் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எமது செய்திச் சேவை வினவிபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.
Post a Comment