அதிகரிக்கும் டெங்கு நோயின் தாக்கத்தால் யாழில் இருவர் உயிரிழப்பு - Yarl Voice அதிகரிக்கும் டெங்கு நோயின் தாக்கத்தால் யாழில் இருவர் உயிரிழப்பு - Yarl Voice

அதிகரிக்கும் டெங்கு நோயின் தாக்கத்தால் யாழில் இருவர் உயிரிழப்பு


யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரத்து 557 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்று யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல் வெளியிட்டுள்ளது.

யுhழ்.மாவட்டத்தில் வழமை போன்று மழை காலம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து டெங்கு நோய் தாக்கம் இம்முறையும் அதிகரித்துள்ளது.

இவ் வருடத்தில் இதுவரை யாழ். மாவட்டத்தில் மட்டும் டெங்கு நோயாளர்கள் 3 ஆயிரத்து 854 பேர் இனம் காணப்பட்டதுடன் கடந்த ஒக்டோபர் மாதம் 537 பேரும் இம்மாதம் நடுப்பகுதிவரை 1020 பேர் இனம் காணப்பட்டனர்.

டெங்கு நோய் தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்டத்திலுள்ள பிரதேச சுகாதார பணிமனைகளுக்கும் டெங்கு நோய் முன்னெச்சரிக்கை தொடர்பில் சகல அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் டெங்கு நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதுடன் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post