இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் முத்த துணைத் தலைவரும் வட மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
முகாகவி பாராதியாரின் 137 ஆவது ஐனன தின நிகழ்வில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..
தமிழரசுக் கட்சியின் 70 ஆவது அண்டு நிறைவு விழாவை வடக்கு கிழக்கில் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கிழக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக அங்கு அந்த நிகழ்வை பெரிய அளிவில் இல்லாமல் சுருக்கமாகச் செய்ய இருக்கிறோம்.
அதே நேரத்தில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள நல்லூர் இளஞ்கலைஞர் மன்றத்தில் நடாத்துவதற்குத் தீர்மானதித்துள்ளோம்.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இந் நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் தொண்டர்கள் எனபல் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார்.
Post a Comment