புதிய மாற்று அணிகள் கூட்டமைப்பிற்கு சவால் இல்லை, தேர்தல்களில் எந்தவித செல்வாக்கும் அவர்களுக்கு கிடைக்காது - மாற்று அணி குறித்து சுமந்திரன் அதிரடி - Yarl Voice புதிய மாற்று அணிகள் கூட்டமைப்பிற்கு சவால் இல்லை, தேர்தல்களில் எந்தவித செல்வாக்கும் அவர்களுக்கு கிடைக்காது - மாற்று அணி குறித்து சுமந்திரன் அதிரடி - Yarl Voice

புதிய மாற்று அணிகள் கூட்டமைப்பிற்கு சவால் இல்லை, தேர்தல்களில் எந்தவித செல்வாக்கும் அவர்களுக்கு கிடைக்காது - மாற்று அணி குறித்து சுமந்திரன் அதிரடி


மாற்று அணிகள் எங்களுக்கு சவால் இல்லை. ஆயினும் மாற்று அணி என்று சொல்லிக் கொண்டு வருபவர்களுக்கு தேர்தல்களில் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஆகையினால் அவர்களுக்கு எந்தவிதமான செல்வாக்கும் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் கிடைக்காது.

மாற்று அணி உருவாக்கப்படுகின்ற முயற்சிகள் குறித்து கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..

கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்படுகின்ற மாற்று அணிகள் ஒரு போதும் எங்களுக்குச் சவாலாகவே இருக்காது. ஆனால் இது மாற்று அணிக்கான நேரமல்ல என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன். எங்களது மக்களுக்கும் அது நல்லாகவே தெரியும்.

எமது மக்கள் கடந்த ஐனாதிபதித் தேர்தலில் என்ன விதமாக வாக்களித்தார்கள் என்று பார்த்தால் அவர்களுக்கு தருணம் காலம் என இந்த தருணத்தில் எப்படியாக இயங்க வேண்டுமென்பதெல்லாம் நன்றாகவே அவர்களுக்கு தெரிந்திருக்கிறதென்பது அதிலயும் ஊர்ஐpதம் ஆகியிருக்கிறது.

ஆனபடியினால் வரப் போகிற பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் ஒரு மாற்று அணியின் செல்வாக்கு எவ்வாறு இருக்கிறது என்று பரீட்சிர்த்துப் பார்க்கிற நேரம் இது இல்லை என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

எனினும் அதையும் மீறி யாராவது மாற்று அணியென்று முன்வந்தார்களாக இருந்தால் அவர்களுக்கு எந்தவிதமான செல்வாக்கும் தேர்தலில் கிடைக்காது. ஆகையினால் மாற்று அணிகள் என்பது எமக்கு சவால் இல்லை என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கிறோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post