ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் 300 இற்கும் மேற்பட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 வயது வீரரும் தெரிவாகியிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டிற்கான இந்த தொடரின் ஏலம் எதிர்வரும் 19ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள சுமார் 971 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அதை எல்லாம் சரி பார்த்துஇ 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஏலத்தில் 14-வயது ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது அறிமுகமாகவுள்ளார். ஏலத்தில் அவர் பங்கேற்கும் தகவல்களை ஐபிஎல் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த நூர் முகமதுவைஇ ஐபிஎல் ஏலத்தில் ஏதேனும் ஒரு அணி வாங்கினால் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்ற குறைந்த வயது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
Post a Comment