சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஹதிஜன் பகுதியில் நித்யானந்தாஇ ஆசிரமம் நடத்தி வந்தார். இதன்போது அங்கு 2 சிறுமிகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் நித்யானந்தா மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்தே அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார். இதை முதலில் மத்திய அமைச்சகம் மறுத்து வந்த நிலையில்இ நேற்று வெளிநாட்டில் இருக்கும் நித்யானந்தாவை பிடித்து வர உள்ளதாகவும் அறிவித்தது.
இந்நிலையில் அந்த ஆசிரமம் சர்ச்சைக்குரிய பள்ளியை நடத்திவரும் கலோரெக்ஸ் அறக்கட்டளையிடம் இருந்து சட்டவிரோதமாக குத்தகைக்கு பெறப்பட்டுள்ளதாக ஆமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஆணைய அதிகாரிகள் நேற்று அந்த ஆசிரமத்தை தரைமட்டமாக்கியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸுக்கும் கல்வித்துறைக்கும் தகவல் தெரிவித்த பின்னரே சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ஆசிரமத்தை இடித்துள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment