சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க வலியுறுத்தி சாவகச்சேரியில் போராட்டம் - Yarl Voice சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க வலியுறுத்தி சாவகச்சேரியில் போராட்டம் - Yarl Voice

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க வலியுறுத்தி சாவகச்சேரியில் போராட்டம்



சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராகவும் அந்த மணல் அகழ்வைத் தடுக்க வலியுறுத்தியும் சாவகச்சேரியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

சமூக ஆர்வலர் அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஏற்பாட்டில் சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டது.

இதன் போது சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை என்ன வேடிக்கை பார்க்கிறதா, வளத்தை வனாத்தரமாக்கும் வனத்திணைக்களம் எதற்காக? தமிழர் தாயகத்தைப் பாலைவனமாக்கப் போகிறீர்களா? முண்மாபியாக்களை வளர்ப்பதா அரசின் நோக்கம்? உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியிரந்தனர்;.

இதனைத் தொடர்ந்து மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி சாவகச்சேரி பிரதேச செயலாளரிடம் மகஐரொன்றும் கையளிக்கப்பட்டது. அத்தோடு இந்த மணல் அகழ்வை நிறுத்த வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூடு;டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொது மக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





0/Post a Comment/Comments

Previous Post Next Post