தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு இல்லை - சுவிட்சர்லாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Yarl Voice தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு இல்லை - சுவிட்சர்லாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Yarl Voice

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு இல்லை - சுவிட்சர்லாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்துடன்இ 12 தமிழர்களுக்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) தனது தீர்ப்பை வெளியிட்டுள்ள சமஸ்டி நீதிமன்றம் தனது முன்னைய தீர்ப்பை மீண்டும் உறுதிசெய்துள்ளது.

1999 முதல் 2009 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக சுவிட்சர்லாந்தின் குற்றவியல் கோவையை மீறியதாக 12 பேருக்கு எதிராக சுவிஸின் சட்டமா அதிபர் அலுவலகம் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

ஓன்பது வருடங்களாக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களுக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

எனினும் 2018 யூன் மாதம் சமஷ்டி நீதிமன்றம் விடுதலைப் புலிகளிற்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் இடையிலான தலைமைத்துவ தொடர்புகளுக்கான போதிய ஆதாரங்கள் இல்லை என சமஷ்டி குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஏப்ரல் மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த தீர்ப்பிற்கு எதிராக முறையீடு செய்திருந்ததுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவியல் அமைப்பிற்கு ஆதரவளித்துள்ளனர் என தெரிவித்திருந்தது.

இது குறித்து இன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ள சமஸ்டி நீதிமன்றம் தனது முன்னைய தீர்ப்பை மீண்டும் உறுதிசெய்துள்ளது.

சுவிஸின் குற்றவியல் கோவையின் 260 ஆவது பிரிவு திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் அல்ஹூவைதா போன்ற அமைப்புகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

நிதி திரட்டப்படும் வேளை விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பாக கருதப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அக்காலப் பகுதியில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியவர்கள் தாங்கள் பின்னர் சட்டத்தை மீறுவார்கள் என கருதியிருக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது பிரதான நோக்கம் இன சமூகத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதே என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post