திட்டமிட்ட நோக்கில் எம் மீது இனவாத முத்திரை, கூட்டமைப்பும் துணை என்கிறார் கஜேந்திரன் - Yarl Voice திட்டமிட்ட நோக்கில் எம் மீது இனவாத முத்திரை, கூட்டமைப்பும் துணை என்கிறார் கஜேந்திரன் - Yarl Voice

திட்டமிட்ட நோக்கில் எம் மீது இனவாத முத்திரை, கூட்டமைப்பும் துணை என்கிறார் கஜேந்திரன்




தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீது திட்டமிட்ட பொய்களின் அடிப்படையில் இனவாத முத்திரை குத்தப்படுகின்றது. நாங்கள் இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. தமிழ் மக்களின்; உரிமைகளுக்காகவே செயற்ப்ப்ட்டு வருகின்றோம். ஆனால் தென்னிலங்கை தரப்புக்கள் எங்கள் மீது இனவாத மன்திரை குத்துகின்ற அதே நேரத்தில் அவர்களது அந்தச் செயற்பாடகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பங்கிருப்பதாகவும் அக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கNஐந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் தெரிவித்ததாவது..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீது தென்னிலங்கை சிங்கள தரப்புக்களால் இனவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது. அந்த முத்திரை குத்தப்பட்டதில் கூட்டமைப்பிற்கும் அதில் பங்கு இருக்கிறது. ஏனெ;ன்று சொன்னால் அவர்கள் தென்னிலங்கையில் எங்களைப் பற்றி நிறையப் பொய்களைச் சொல்லியிருக்கிறார்கள். 

நாங்கள் பிரிவினைக்காக வேலை செய்கிற தரப்பாக ஒரு கடும் போக்காளர்களாக கடந்த காலங்களில் எங்களைப் பற்றி இவர்கள் பிரச்சாரங்களைச் செய்திருக்கிறார்கள். 

அதே நேரத்தில் ஒக்ரோபர் மாதம் மாணவர்கள் கூடு;டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட இறைமை அடிப்படையில் தீர்வு என்று நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அனைத்து தரப்புக்களும் இணங்கியிருந்தவர்கள். அதைவிட நாங்கள் புதுசாக வேறொன்றும் பேசவில்லை. 

ஆக நாங்கள் கேட்பது வடகிழக்கு எங்கள் தேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும.; நாங்கள் சொல்வது என்னவென்றால் சிங்கள மேலாதிக்கத்தை அதாவது பேரினவாதத்தை தான் நாங்கள் எதிர்க்கிறோம என்பது தான்;. நாட்டை பிரிக்கச் சொல்லியும் நாங்கள் கேட்கவில்லை. 

எங்களை ஒரு இனவாதத் தரப்பாக சொல்வது ஒரு பொய்களின் அடிப்படையில் தான் அந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நாங்கள் இனவாத அடிப்படையில் எந்தச் செயற்பாட்டையும்; முன்னெடுக்கவில்லை. 

பத்து ஆண்டுகளில் இலட்சக்கணக்கான சிங்களவர்கள் வடகிழக்கிற்கு வந்த சொன்றிருக்கின்றனர். எந்தவொரு இடத்திலாவது தனிச் சிங்களவருக்கு எதிராக எங்கள் கட்சியை அடையாளப்படுத்திய யாரும் வந்த எந்தவிதமான ஒரு செயற்பாடுகளிலம் ஈடுபட்டது கிடையாது. அல்லது வடகிழக்கில் இரக்ககக் கூடிய சிங்கள மக்களுக்கு எதிராக எந்தவnரு இடத்திலையும் எதனையும் செய்யவில்லை. 

ஆனால் சிங்களக் குடியேற்றங்களை நாங்கள் எதிர்ப்போம். முஸ்லீம் மக்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புகிற வேலைத் திட்டத்தை முன்னெடுக்கிறோம். நாங்கள் இனவாதம் என்று சொல்வது திட்டமிட்ட பொய். 

நாங்கள் வடகிழக்கு தாயகத்தின் அங்கீகாரத்தைக் கோருவதும் நாங்கள் சுயநிர்ணயத்தைக் கோருவதுடம் எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தையும் தேசத்தின் இறைமையையும் அங்கீகரிக்க கோருவதும் இனவாதம் என்று சொன்னால் அதைப்பற்றி எங்களுக்கு பிரச்சனையில்லை. அதை நாங்கள் சந்திக்க நாங்கள் தயார். 

ஆனால் பொய்களை வைத்துக் கொண்டு கூப்பாடு போடுவதால் எதுவும் நடக்க போறதில்லை. எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளுக்காகத் தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எந்தவிதமான வன்முறைச் செயற்பாடுகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை. மிகவும் ஐனநாயக முறையில் தான் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post