பாம்பு கடிக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு
புடையன் பாம்பு கடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இந்த சம்பவத்தில் மட்டுவில் வடக்கை சேர்ந்த கந்தன் சண்முகம் (வயது 65)என்பவரே உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
மட்டுவில் பகுதியில் வசித்து வரும் குறித்த நபர் கூலிவேலை செய்து வருபவர்.இவர் கடந்த 26 ஆம் திகதி வளவு ஒன்றினை துப்புரவு செய்து கொண்டு இருந்துள்ளர் எதிர்பாராத விதமாக காலில் பாம்பு கொத்தி உள்ளது பாம்பு கொத்துக்கு இலக்கான குறித்த குடும்பஸ்தர் மயக்கமடைந்துல்லார்.
உடனடியாக அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (28)இரவு உயர்ந்துள்ள இந்த இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.
Post a Comment