ஐ.பீ.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் ஆரம்பம்
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் நாளை நடைபெறவுள்ளது.
13வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல்இ மே மாதங்களில் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் இந்த தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் தெரிவு செய்வதற்கான ஏலம் கொல்கத்தாவில் நாளை இடம்பெறவுள்ளது.
இந்த ஏலத்திற்கான பெயர் பட்டியலில் 146 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 332 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களிலிருந்து 73 வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
ஒவ்வொரு அணியும் ஏலத்தின் போது அதிகபட்சமாக 85 கோடி இந்திய ரூபா செலவிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment