யாழில் கூட்டுறவுப் பெரியார் வீரசிங்கத்தின் நினைவுதினம்
கூட்டுறவு பெரியார் வீரசிங்கத்தின் 55 ஆவது நினைவு தின நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
யாழ் மாவட்டக் கூட்டுறவுச் சபைத் தலைவர் தலைவர் தி.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
மேலும் நிகழ்வில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர்இ யாழ்ப்பாண கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி ச.சியாமளாஇ மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் கே.கோடீஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது வீரசிங்கத்தின் நினைவுப் பேருரையை இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய முகாமையாளர் பா.சிவதீபன் நிகழ்த்தியிருந்தார்.
மேலும் பணியாளர்கள்இ கூட்டுறவாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் கூட்டுறவு சபை அதிகாரிகள் ஊழியர்கள் பணியாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment