தனது சொல்லிற்கு அடங்குகின்ற ஒருவரையே வடக்கு ஆளுநராக ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்ச நியமிப்பாரென தென்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு ஆளுநர் நியமனம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..
நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னராக மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வடக்கு ஆளுநர் நியமனம் குறித்து மகிந்த ராஐபக்ச என்னோடு தான் பேசியிருக்கின்றார்.
மேலும் இதன் போது கிழக்கு மற்றும் வடக்கு ஆளுநர் பற்றியும் பேசினார். ஆனால் யாரை நியமிப்பது என்பது சம்மந்தமாக பேசவில்லை. எந்த இனத்தவரை நியமிப்பது என்பது சம்மந்தமாக தான் என்னோடு பேசியிருக்கின்றார். ஆயினும் அவர்கள் எங்களுடைய கருத்தைக் கேட்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
அதே வேளையிலே பிரதம மந்திரியினுடைய கருத்துக்கும் அதிக முக்கியத்தவம் வழங்கப்படுவதாகத் தெரியவில்லை. ஆகவே ஐனாதிபதி தான் விரும்புகிற தன்னுடைய சொல்லிற்கு அடங்குகிற ஒருவரைத் தான் நியமிப்பார் போலத் தென்படுகிறது.
Post a Comment