சூரிய கிரகனத்தால் மோடிக்கு ஏற்பட்ட கவலை - Yarl Voice சூரிய கிரகனத்தால் மோடிக்கு ஏற்பட்ட கவலை - Yarl Voice

சூரிய கிரகனத்தால் மோடிக்கு ஏற்பட்ட கவலை


இன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தை தன்னால் நேரடியாக பார்க்க முடியவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பின்னர் இன்றையதினம் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்த நிலையில் தன்னால் நேரடியாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி சூரிய கிரகணத்தை கண்ணாடி உதவியுடன் பார்க்க முயற்சித்த படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பதிவில்

பல இந்தியர்களை போலவே நானும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக ஆர்வமாக இருந்தேன். துரதிஷ்டவசமாக மேகமூட்டம் காரணமாக என்னால் சூரியனை பார்க்க முடியவில்லை ஆனால் கோழிக்கோடு மற்றும் பிற பகுதிகளில் நடந்த கிரகணத்தின் காட்சிகளை பார்த்தேன்.

இது தொடர்பாக நிபுணர்களுடன் பேசியதன் மூலம் இந்த வி‌ஷயத்தில் எனது அறிவு வளப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post