இரண்டரை வயது குழந்தை கிணற்றில் வீசி கொலை? - தாய் தந்தையரிடம் பொலிஸார் விசாரணை - Yarl Voice இரண்டரை வயது குழந்தை கிணற்றில் வீசி கொலை? - தாய் தந்தையரிடம் பொலிஸார் விசாரணை - Yarl Voice

இரண்டரை வயது குழந்தை கிணற்றில் வீசி கொலை? - தாய் தந்தையரிடம் பொலிஸார் விசாரணை


இரண்டரை மாத பாலகன் நள்ளிரவு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் துன்னாலையில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையார் இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் தாயாருடன் பாலகன் உறங்கியுள்ளான்.

இந்த நிலையில் பாலகனை நேற்றிரவு 11.30 மணி முதல் காணவில்லை என்று தாயார் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இன்று காலை கிணற்றிலிருந்து  மீட்கப்பட்ட பாலகனின் சடலம் மந்திகை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று விசாரணையின் பின்னரே உண்மை துலங்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெல்லியடிப் பொலிஸார்இ தந்தையையும் தாயாரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post