சிகரெட் மதுபான விலைகளில் மாற்றமில்லை - அமைச்சர் பந்துல
'வற்' வரி 8வீதமாக குறைக்கப்பட்டது. இதனூடாக பொருட்கள் சேவைகளின் விலைகள் குறைவடைந்து மக்களுக்கு அதன் நன்மை சென்றடையவேண்டும். இதை உறுதி செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சினூடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
விலைக் குறைப்பின் பயன்கள் மக்களை சென்றடைய பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும் என்ற கருத்து தவறானது என்று கூறிய அவர்இ 'வற்' வரி குறைப்பால் சிகரட்இ மதுபான விலைகள் குறையாது என்றும் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்இ உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட வருமானம் திரட்டும் சகல நிறுவனங்களும் வரி குறைப்பு தொடர்பான சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளன. வரி குறைத்தாலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இதன் பலன் கிடைக்காது என சிலர் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3மாத காலத்திற்குள் இதற்கு பாராளுமன்ற அனுமதி பெற்றால் போதுமானது.
Post a Comment