உலக அழகிக்கான மகுடத்தைச் சூடிய ஜமைக்கா பெண்
உலக அழகிக்கான மகுடத்தினை ஜமைக்காவைச் சேர்ந்த டோனி ஆன்சிங் சூடியுள்ளார்.
69-வது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமானது.
111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றதில் பல்வேறு போட்டிகளுக்குப் பின் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டனர்.
உலக அழகி யார் என்பதை தெரிவு செய்வதற்கான போட்டி நேற்றிரவு(சனிக்கிழமை) நடைபெற்றது.
இதில் ஜமைக்கா பிரான்ஸ் இந்தியா பிரேசில் நைஜீரியா அழகிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
இறுதிச் சுற்றில் ஜமைக்கா இளம்பெண் டோனி- ஆன்சிங் உலக அழகியாக தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு கடந்த ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற மெக்சிகோ அழகியான வனிசா பொன்சி டி லியான் மகுடம் அணிவித்திருந்தார்.
பிரான்சின் ஓபெலி மெசினா இரண்டாம் இடத்தையும் இந்திய அழகி சுமன்ராவ் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றியிருந்தார்.
Post a Comment