அராலியில் தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்ட உதவிய குகதாஸ்
யாழ்ப்பாணம் அராலியில் தீவிபத்து ஏற்பட்ட குடும்பத்தின் நிலைமைகளைப் பார்வையிட்ட முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் அந்தக் குடும்பத்திற்கு உதவியையும் வழங்கியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அராலி மத்தியிலுள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது குறித்த வீட்டில் இருந்த பொருட்களும் வீடும் தீயில் எரிந்துள்ளது.
மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட இக் குடும்பத்தின் நிலைமைகளை; ஊடகங்களில் வெளியாகியிரந்த நிலைமையில் இன்றையதினம் அக்குடும்பத்தின் வீட்டிற்கு நேரடியாக குகதாஸ் விஐயம் செய்திருந்தார்.
இதன் போது அந்தக் குடும்பம் எதிர்நொக்கியுள்ள பிரச்சனைகள் மற்றும் தேவைகளைக் கேட்டறிந்ததுடன் முதற்கட்டமாக தன்னாலான பண உதவியையும் வழங்கி வைத்துள்ளார். அத்தோடு தொடர்ந்தும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கும் தன்னாலான முயற்சிகளை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.
Post a Comment