13 ஆவது திருத்தம் தீர்வல்ல, அது பயனற்றது என்பதை இந்தியாவும் உணர வேண்டும் - விக்னேஸ்வரன் அதிரடி - Yarl Voice 13 ஆவது திருத்தம் தீர்வல்ல, அது பயனற்றது என்பதை இந்தியாவும் உணர வேண்டும் - விக்னேஸ்வரன் அதிரடி - Yarl Voice

13 ஆவது திருத்தம் தீர்வல்ல, அது பயனற்றது என்பதை இந்தியாவும் உணர வேண்டும் - விக்னேஸ்வரன் அதிரடி



13 ஆவது திருத்தம் தீர்வல்ல அது பயனற்றது என்பதை இந்தியா உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்து கொண்டால் 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்க இந்தியாவே தயங்கும் என்கிறார் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வீ.விக்கினேஸ்வரன் 

இந்தியா பரிந்துரைக்கும் 13ஆவது திருத்தம் தமிழருக்கான தீர்வு இல்லை. ஒற்றையாட்சிக்குள் தரப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்ட ஏற்பாடுகள் பயன் அற்றவை.


13 ஆவது திருத்தச் சட்டம் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்பதை இந்தியா உணர வேண்டும். 

உதாரணத்துக்கு 1992 ஆம் ஆண்டின் 58 ஆவது சட்டத்தின் கீழ் மாகாண சபையின் நிர்வாகத்திறன் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா இதை உணர்ந்தால் அவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை பரிந்துரைக்கத் தயங்குவார்கள் என்பதே எமது கணிப்பு.

0/Post a Comment/Comments

Previous Post Next Post