யாழில் நடைபெற்ற இந்தியக் குடியரசு தின நிகழ்வு - Yarl Voice யாழில் நடைபெற்ற இந்தியக் குடியரசு தின நிகழ்வு - Yarl Voice

யாழில் நடைபெற்ற இந்தியக் குடியரசு தின நிகழ்வு

இந்தியக் குடியரசு நாளின் 71 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் யாழ்ப்பணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இன்று  நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் துனைத்துதுவர் கே.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.குடியரசின் ஆண்டு நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுகள் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்றது.

அதன்பின்னர் இந்திய நாட்டின் தேசியக் கொடியினை துனைத்துதுவர் பாலச்சந்திரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்திய குடியரசு தலைவரின் குடியரசு நாளின் ஆண்டுவிழா உரையினை துனைத்துதுவர் ஆற்றினார்.

இந்த நிகழ்வில் இந்திய துனைத்துதரக அதிகாரிகள்இமத தலைவர்கள் பொலிஸ் அதிகாரிகள் மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post