பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் (kickboxing) என்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்துகொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை குறித்த போட்டிகள் நடைபெற்றன.
சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்ட வடக்கு மாகாண குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு நான்கு தங்கப் பதக்கங்களையும் மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண கிக் பொக்சிங் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரும் வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமாரினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களே இவ்வாறு பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சஞ்சயன் (18)இ பி.ராகுல் (17)இ வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் கெ.நிரோஜன் (16) மற்றும் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ.கெவின் (11) ஆகியோர் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
ரி.நாகராஜா (18)இ வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த வி.வசீகரன் (17) மற்றும் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ்.சிறிதர்சன் (18) வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சர்வதேச குத்துச் சண்டை பயிற்றுவிப்பாளரும் பிரான்ஸ் சவாட் குத்துச்சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்ரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வடமாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்களும் தென்னிலங்கையைச் சேர்ந்த பதின்நான்கு வீரர்களுமாக 21 வீரர்கள் இலங்கையைப் பிரதிபலித்து பாக்கிஸ்தானுக்கு பயணமாகியிருந்தனர்.
இவ்வீரர்கள் இலங்கைக்கு 11 தங்கப் பதக்கங்களையும் 8 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
இதன்போதுஇ தெற்காசிய வூசு கூட்டமைப்பின் தலைவரும் பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பாளருமான மாலிக் இப்திகார் உள்ளிட்ட குழுவினரின் தலைமையில் பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் வெற்றி வாகை சூடிய எமது வீரர்கள்இ நாளை மாலை 4 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment