முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு யாழ் பல்கலைக்கழகத்தில் - Yarl Voice முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு யாழ் பல்கலைக்கழகத்தில் - Yarl Voice

முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு யாழ் பல்கலைக்கழகத்தில்

வரலாற்றுப் போக்கில் தமிழியல் ஆய்வுகள் எனும் கருப் பொருளில் முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை பிரிவின் ஏற்பாட்டில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பல்கலைக்கழக பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமி கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது ஆய்வரங்க  கட்டுரை வெளியீட்டு தொகுதியை தமிழ்த்துறை தலைவர் இரகுநாதன் வெளியிட்டு வைக்க தகுதி வாய்ந்த அதிகாரி கந்தசாமி பெற்றுக்கொண்டார்

இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் இந்தியாவின் தமிழகத்தில் இருந்து வந்த பேராசிரியர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நாளை சனிக்கிழமையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




0/Post a Comment/Comments

Previous Post Next Post