யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம் - Yarl Voice யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம் - Yarl Voice

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம்


யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்

தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளையும் மூடுவதற்கு முஸ்தீபு எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது அரசாங்கம் எடுத்துள்ள பல்கலைக்கழக கல்லூரிகள் மூடும் முடிவிற்கு தாம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ள மாணவர்கள் இந்த முடிவினை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழக கல்லூரிகளில் சீருடைகள் கட்டாயப் படுத்தப் படாத நிலையில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பல்கலைக்கழக கல்லூரியில் மட்டும் சீருடையை கட்டாயப்படுத்தி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post