சிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் - இலங்கை அபார வெற்றி - Yarl Voice சிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் - இலங்கை அபார வெற்றி - Yarl Voice

சிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் - இலங்கை அபார வெற்றி

இலங்கை அணிக்கெதிராக கடைசி நாள் முழுவதும் தோல்வியை தவிர்க்க போராடிய நிலையில் 13 ஓவர்கள் இருக்கும் நிலையில் தோல்வியை சந்தித்தது.

ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 358 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 515 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் ஜிம்பாப்வே 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ரன்கள் அடிப்பதை விட எப்படியாவது இன்றைய நாளை கழித்து விட்டால் போட்டியை டிரா செய்து விடலாம் என்ற நோக்கத்தில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சராசரியாக 50 பந்துக்கு மேல் சந்தித்தனர். இறுதியாக விக்கெட் கீப்பர் சகப்வா 142 ரன்கள் பந்துகள் சந்தித்து கடைசி நபராக ஆட்டமிழந்தார். அப்போது ஆட்டம் முடிய 13 ஒவர்களே இருந்தது. ஆனால் 13 ரன்களே முன்னிலைப் பெற்றிருந்தது.

பின்னர் இலங்கை 3 ஓவரில் 14 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி  பெற்றது. 92 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே மேலும் 13 ஓவர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியை சந்தித்தது

0/Post a Comment/Comments

Previous Post Next Post