கொரோனா வைரஸ் குறித்து ஐனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை - Yarl Voice கொரோனா வைரஸ் குறித்து ஐனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை - Yarl Voice

கொரோனா வைரஸ் குறித்து ஐனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தேசிய செயற்பாட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு தழுவிய ரீதியில் இக்குழுவின் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தேசிய செயற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறு சுகாதார மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்று இலங்கைக்குள் பரவாமல் இருப்பதற்கும்இ அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு வாய்ந்த குழுவினர் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இக்குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியல் அட்மிரல் ஜயநாத் கொலபகே சுகாதார செயலாளர் ஹதுனி ஜயவர்தன சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் சில்வா உள்ளிட்ட விசேட வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக பிரிகேடியர் வைத்தியர் கிருஷாந்த பெர்னாண்டோ விமான சேவை நிறுவனத் தலைவர் ஜெனரல் பி.எச்.சந்திரசிறி மற்றும் குடிவரவு குடியகல்வு நிர்வாகப் பிரிவினரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இக்குழுவினர் இன்று மாலை சுகாதார அமைச்சர் தலைமையில் சுகாதார அமைச்சில் முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தக் குழுவின் ஆலோசனைகளை மற்றும் செயற்றிட்டங்களை தெளிவுப்படுத்தும் விதமான விசேட கலந்துரையாடல் நாளை காலை 11 மணியளவில் சுகாதார அமைச்சில் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post