பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் - Yarl Voice பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் - Yarl Voice

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

யாழ்.பருத்துறை பிரதேசசபை உறுப்பினர் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று இரவு 7 மணியளவில் கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஈ.பி.டி.பி கட்சி சார்ந்த பருத்துறை பிரதேசசபை உறுப்பினரான செபமாலை செபஸ்ரியன் என்பவர் கையில் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இனந்தெரியாத நபர்கள் இவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக எனத் தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post