இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் சமுர்த்தி வங்கி முகாமையாளர் வரதராஜா கேதீஸ்வர சர்மா என்பரின் கல்வியங்காட்டில் உள்ள வீட்டு காணிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத இருவர் அங்கு தரித்திருந்த காருக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இருப்பினும் சம்பவத்தை உணர்ந்த வீட்டாரும் அயலவர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர்.
கடந்த இரவு 11.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டார் உறக்கத்தில் இருந்ததாகவும் தெரியவருகிறது.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment