நாகர்கோவிலில் இரானுவத்தால் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்த சுமந்திரன் - Yarl Voice நாகர்கோவிலில் இரானுவத்தால் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்த சுமந்திரன் - Yarl Voice

நாகர்கோவிலில் இரானுவத்தால் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்த சுமந்திரன்

யாழ்.நாகா்கோவில் பகுதியில் இராணுவம் மீது தாக்குதல் நடாத்தியதாக கைது செய்யப்பட்ட 8 இளைஞா்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

தை பொங்கல் தினத்தில் இராணுவத்தினா் மீது தாக்குதல் நடாத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வெவ்வேறு பகுதிகளில் 8 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

குறித்த விடயம் தொடா்பாக கைது செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினரை நாகா்கோவில் பகுதிக்கு சென்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் தான் இந்த வழக்கில் முன்னிலையாவதாக உறுதியளித்திருந்தாா்.

இதற்கமைய இன்று காலை பருத்துறை நீதிமன்றில் குறித்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில்  8 இளைஞா்களும் தலா 5 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை மற்றும் 1லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனா். குறித்த வழக்கு விசாரணையின்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொலிஸாரை கேள்விகளால் மண்டியிடவைத்தாா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post