‘கொரோனா வைரஸ்’ இந்தியாவில் பரவுமா?: மருத்துவ நிபுணர் கூறும் விளக்கம் - Yarl Voice ‘கொரோனா வைரஸ்’ இந்தியாவில் பரவுமா?: மருத்துவ நிபுணர் கூறும் விளக்கம் - Yarl Voice

‘கொரோனா வைரஸ்’ இந்தியாவில் பரவுமா?: மருத்துவ நிபுணர் கூறும் விளக்கம்

பன்றி காய்ச்சலுக்கும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கும் ஒற்றுமை இருக்கிறது. இவை இரண்டும் ஜலதோ‌‌ஷத்தில் தான் ஆரம்பிக்கிறது. அதில் இருந்த படிப்படியாக மற்றவர்களுக்கு பரவுகிறது.

நோய் வருவதும் அதை குணப்படுத்துவதும் அல்லது கட்டுக்குள் வைப்பதும் விஞ்ஞான உலகில் ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது. ஆனாலும் புதிய நோய்க்கான காரணம் அறிந்து அதை குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிப்பதற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களாவது பலியாகி விடுகின்றன.

இப்படி உலகில் எந்த மூலையில் எந்த நோய் பரவினாலும் உலக நாடுகள் அனைத்துமே கைகோர்த்து அந்த நோயை கட்டுப்படுத்தவும்இ அதற்கு தீர்வு காணவும் முழு வீச்சில் இறங்குவதுண்டு. அந்த வகையில் கடந்த சில நாட்களாக மருத்துவத்துறையை படு வேகமாக செயல்பட வைத்திருக்கிறது இந்த நோவல் கொரோனா வைரஸ். சாதாரண வைரஸ் தொற்றுதான் இது என்று கடந்துவிட முடியாமல் ஆளை கொல்லும் இந்த வைரஸை கண்டுதான் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்திருக்கின்றன. அவ்வளவு கொடியது இந்த நாவல் கொரோனா வைரஸ் என்பது நூற்றுக்கும் மேற்பட்டோர் இறப்பின் மூலம் அறியமுடிகிறது.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் உகான் பகுதியில் ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றார். அதிகப்படியான காய்ச்சல் அதை தொடர்ந்து மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாவதாக தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அவருடைய உடல் பலவீனம் அடைந்திருக்கிறது. இதேபோன்று மக்கள் தொடர்ந்து மருத்துவரிடம் வரும்போது மருத்துவர்கள் இது புதிய வைரசால் ஒரு தொற்று பரவி இருப்பதை உணர்ந்து கண்டறிந்தார்கள். இதை தொடர்ந்து சீனாவின் தேசிய சுகாதார கமி‌‌ஷன் இதை உறுதி செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்தது.

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும் என்று வலியுறுத்தியது. தற்போது சீனாவின் உகான் மாநிலத்திலிருந்து 13 மாகாணங்களிலுள்ள மக்களுக்கு தொற்று நோய் பரவ தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொற்றுக்கு 90 சதவீதம் இந்த கொரோனா வைரஸ் தான் காரணம் என்பதை உறுதி செய்திருக்கிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் குடும்பத்தில் 4 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இது 5-வது வைரஸாக உருவெடுத்துள்ளது.

2003-ம் ஆண்டு சார்ஸ் என்னும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது வவ்வால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு 700-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்த கொரோனா வைரஸ் தொற்றில் மற்றொரு உருமாற்றமான மெர்ஸ் கொரோனா வைரஸ் என்பது கடந்த 2015-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதை கேமல் ப்ளூ என்றும் அழைத்தார்கள். ஏனெனில் இதுவும் விலங்கில் இருந்து மனிதனுக்கு பரவியது.

இந்த நோய்க்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். சார்ஸ் வைரசை காட்டிலும் இது கொடியதாகவும்இ இறப்பு விகிதத்தை அதிகரித்ததாகவும் தெரியவந்தது. இந்த வைரஸ் தடுப்புக்குஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்தாலும் இன்றுவரை இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதனால்தான் வைரஸ் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் போதுஇ மருத்துவத்துறையும் உலக மக்கள் அனைவரும் பீதிக்கு உள்ளாகிறார்கள்.

இது குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரி கொரோனா வைரஸ் சிகிச்சை குழு தலைவர் டாக்டர் பிரபாகரன் கூறியதாவது:-

சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளுக்கு பரவி வருகிறது. சீன நாட்டில் அதிகப்படியான விலங்குகளின் இறைச்சியையும் கடல் வாழ் உணவுகளையும் சாப்பிடுகிறார்கள். இப்படி தான் விலங்குகளிடருந்து மனிதனுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. இந்த வைரசானது நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலை உண்டாக்குகிறது. இவை மனிதனிடமிருந்தும் மனிதனுக்கு பரவும். விலங்கில் இருந்து மனிதனுக்கு பரவிய இந்த வைரஸ்இ தற்போது மனிதனில் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுகிறது.

காய்ச்சல்இ இருமல்இ சளிஇ உடல்சோர்வுஇ சிலருக்கு மூச்சுத் திணறல் இவை அனைத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாகும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். இளநீர் ஓ.ஆர்.எஸ். பவுடர் கஞ்சி நீர் சத்து மிகுந்த ஆகாரங்களை சாப்பிட வேண்டும்.

நோய் அறிகுறிகள் உள்ள நபர் இருமும் போதும் தும்மலின் போதும் வெளிப்படும் நீர் திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது. மேலும் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்போதும் கைகள் மூலமாகவும் பரவுகிறது. இவை காற்றில் பரவும் தன்மை கொண்டது. இதை சுவாசிப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.

இந்த வைரசை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இதன் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டால் இதற்கு தடுப்பு மருந்துகள் உண்டு. நோய் பாதிக்கப்பட்ட நபருக்கு தடுப்பு மருந்துகள் மூலம் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து இந்த நோய் உயிரை கொல்லும் திறன் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வந்தால் அவர் அதில் இருந்து எளிதாக வெளிவந்து விடலாம். ஆனால்இ நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபரை தாக்கினால் அதில் இருந்து வெளிவருவது சிரமம்.

பன்றி காய்ச்சலுக்கும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கும் ஒற்றுமை இருக்கிறது. இவை இரண்டும் ஜலதோ‌‌ஷத்தில் தான் ஆரம்பிக்கிறது. அதில் இருந்த படிப்படியாக மற்றவர்களுக்கு பரவுகிறது. பொதுமக்கள் அதிகம் பேர் கூடும் இடங்களில் செல்ல வேண்டாம். தவிர்க்க முடியாமல் செல்வதாக இருந்தாலும் முகமூடி அணிந்துகொள்ளுங்கள். ஏதேனும் அறிகுறி தென்பட்டால் மருத்துவரை தயங்காமல் அணுகுங்கள். கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுங்கள். கைகளை முகத்துக்கு அருகில் கொண்டு சென்று சுவாசிப்பதையும் தவிர்த்துவிடுங்கள்.

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஒருவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டால் அதற்கான தனி வார்ட்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதனால்இ அவருக்கு மற்ற பாதிப்புகளுக்கான மருந்துகள் வழங்கப்படும். மற்ற நோய்கள் குணமடைந்து விட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பும் மெல்ல மெல்ல குறைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

வெப்பம் ஒரு எதிரி

மேலும் அவர் கூறும் போது ''கொரோனா வைரசால் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. குறிப்பாக தென் மாநில மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஏனென்றால் கொரோனாவிற்கு வெப்பம் ஒரு எதிரி. சீனாவில் தற்போது பனிக்காற்று வீசுவதால் அங்கு வேகமாக பரவுகிறது. ஒரு வேளை கோடை காலமாக இருந்தால் கொரோனாவால் தாக்குப்பிடிக்க முடியாது.

நம் மாநிலத்தில் பனிக்காலம் விடைபெறும் தருணம் இது. இப்போதே பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே கொரோனா பாதிப்பு ஏற்படாது. ஒரு வேளை வந்தாலும் சீனா போன்று பெரிய அளவில் பரவாது. சீனாவில் இருந்து இந்தியா வரும் நபர்களால் மட்டுமே இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உண்டு. அதனால்தான் விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்படுகிறது'' என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post