கமல்ஹாசனின் மௌனம் ஏன்? கட்சியினரிடையே குழப்பம் - Yarl Voice கமல்ஹாசனின் மௌனம் ஏன்? கட்சியினரிடையே குழப்பம் - Yarl Voice

கமல்ஹாசனின் மௌனம் ஏன்? கட்சியினரிடையே குழப்பம்



பெரியார் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறியது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் நடிகர் கமல்ஹாசன் மவுனமாக இருப்பது நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளை பெற்றது.

சட்டமன்ற தேர்தலே தங்களது இலக்கு என்று கூறிவரும் கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல் எதிலும் போட்டியிட வில்லை. கிராமசபை கூட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்ததால் உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதையும் புறக்கணித்து விட்டார்.

காலில் ஆபரே‌ஷன் காரணமாக மருத்துவ ஓய்வில் இருந்த கமல்ஹாசன் சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் கட்சி பணிக்கு திரும்பினார். அடுத்த மாதம் அவர் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியானது. மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளும் உறுதிபடுத்தினார்கள்.

ஆனால் கமல் கடந்த சில நாட்களாக அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டாரா? என்ற அளவுக்கு அமைதியாக இருக்கிறார். இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமைச் சட்டத்துக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு கடந்த டிசம்பரில் தனது அலுவலகத்திற்கு செய்தியாளர்களை அழைத்து தனது கருத்தை கூறியதோடு சரிஇ அதன் பின்னர் எந்த கட்சி நிகழ்ச்சிகளிலும் காண முடிவதில்லை.

அதற்கு பிறகு திருச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகளை வரவழைத்து கூட்டம் நடத்தினார்.

பெரியார் பற்றிய ரஜினி கருத்து சர்ச்சையாகி பற்றி எரிந்த போதுகூட கமல் எந்த கருத்தையும் கூறவில்லை. வழக்கமாக அவர் ஆர்வம் காட்டும் கிராமசபை கூட்டங்களிலும் இந்த முறை ஆர்வம் காட்டவில்லை. அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொண்டு இயல்நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளை பெற்றது.

சட்டமன்ற தேர்தலே தங்களது இலக்கு என்று கூறிவரும் கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல் எதிலும் போட்டியிட வில்லை. கிராமசபை கூட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்ததால் உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதையும் புறக்கணித்து விட்டார்.

காலில் ஆபரே‌ஷன் காரணமாக மருத்துவ ஓய்வில் இருந்த கமல்ஹாசன் சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் கட்சி பணிக்கு திரும்பினார். அடுத்த மாதம் அவர் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியானது. மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளும் உறுதிபடுத்தினார்கள்.

ஆனால் கமல் கடந்த சில நாட்களாக அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டாரா? என்ற அளவுக்கு அமைதியாக இருக்கிறார். இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமைச் சட்டத்துக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு கடந்த டிசம்பரில் தனது அலுவலகத்திற்கு செய்தியாளர்களை அழைத்து தனது கருத்தை கூறியதோடு சரிஇ அதன் பின்னர் எந்த கட்சி நிகழ்ச்சிகளிலும் காண முடிவதில்லை.

அதற்கு பிறகு திருச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகளை வரவழைத்து கூட்டம் நடத்தினார்.

பெரியார் பற்றிய ரஜினி கருத்து சர்ச்சையாகி பற்றி எரிந்த போதுகூட கமல் எந்த கருத்தையும் கூறவில்லை. வழக்கமாக அவர் ஆர்வம் காட்டும் கிராமசபை கூட்டங்களிலும் இந்த முறை ஆர்வம் காட்டவில்லை. அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக ஒரு மாதத்திற்கு முன்பே கூறப்பட்டது.

ஆனால் மீண்டும் அறுவை சிகிச்சையையே கமலின் ஓய்வுக்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.பு நிலைக்கு திரும்பிவிட்டதாக ஒரு மாதத்திற்கு முன்பே கூறப்பட்டது.

ஆனால் மீண்டும் அறுவை சிகிச்சையையே கமலின் ஓய்வுக்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்யும் எண்ணம் கமலுக்கு உள்ளதால் அவர் அமைதி காத்து வருவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

மக்கள் நீதி மய்யத்தில் உள்ள மாவட்ட நிர்வாகிகளும்இ தொண்டர்களும் கமலின் திடீர் அமைதியால் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் சந்திப்பு பயணத்தை பிப்ரவரி மாதம் கமல் தொடங்க இருப்பதால் அதன் பின்னராவது கமல் வேகம் எடுப்பார் என்று நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post